Home இலங்கை யாழ் நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்ட புத்தகபையால் பதற்றம்

யாழ் நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்ட புத்தகபையால் பதற்றம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த புத்தக பை ஒன்றால் பதற்றம் ஏற்பட்டது. எனினும் அது நீதிமன்றில் வழக்குக்காக வந்த ஒருவரினுடையது என விசாரணையில் தெரிய வர பதற்றம் தணிந்தது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தின் முன்பக்க வாயிலில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உள்புறமாக நீல நிற புத்தகப்பை காணப்பட்டதனால் நீதிமன்றில் நின்றோர் குழப்பமடைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

அந்தப் பையை காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அங்கிருந்து அப்புறப்படுத்தியபோது நீதிமன்றுக்கு வழக்குக்கு வருகை தந்திருந்தவர் தன்னுடையது என உரிமை கோரினார்

அதனால் அந்த நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பையை சோதனையிட்ட பின்னர் அதனை அவரிடம் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒப்படைத்தார். இதனால் நீதிமன்றில் சுமார் 30 நிமிடங்கள் பதற்றநிலை நீடித்தது.

 

#jaffna #court #schoolbag

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More