Home இலங்கை வாளை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞனுக்கும் வாளை வழங்கியவருக்கும் விளக்கமறியல்

வாளை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞனுக்கும் வாளை வழங்கியவருக்கும் விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் மற்றும் அவருக்கு வாளை வழங்கியவரையும் வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இ ராணுவத்தினர் , சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். அதன்போது நாவாந்துறை நாவலர் வீதிக்கு அண்மையுள்ள குளம் ஒன்றுக்குள் வாள்ஒன்றை வீச முற்பட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன், அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் அவருக்கு வாளை வீசுமாறு வழங்கிய மற்றொருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தினர்.

அதன் போது சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி “வாள் சந்தேகநபருடையது இல்லை. அதனை அவர் 700 ரூபாவுக்கு அடகு பிடித்தார். காவல்துறையினர்  மற்றும் இராணுவத்தினர் கிராமத்தைச்சுற்றிவளைத்ததால் வாளை குளத்துக்குள் வீசுவதற்கு நண்பரிடம் வழங்கினார். அவர் அதனை குளத்துக்குள் வீசிய போது  காவல்துறையினர் கண்டுவிட்டனர்” என மன்றுரைத்தார்.

ஏன் அந்த வாளை வாங்கி வைந்திருந்தீர்? என்று சந்தேகநபரிடம் மன்று கேள்வி எழுப்பியது. “எனக்கு அந்த வாளைப் பார்த்த போது பிடித்திருந்த்து. அதனால்  அதனை 700 ரூபாவுக்கு அடகு பிடித்தேன்” என்று சந்தேகநபர் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிவான், வாளை உடமையில் வைத்திருப்பது பாரதூரமானது எனக் குறிப்பிட்டு சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More