Home பிரதான செய்திகள் ஐபிஎல் போட்டி – பெங்களூரு வெளியேறுவது உறுதியாகியுள்ளது

ஐபிஎல் போட்டி – பெங்களூரு வெளியேறுவது உறுதியாகியுள்ளது

by admin


பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஐந்து ஓவர்களாக குறைக்கப்பட்டு இறுதியில் எந்த முடிவும் இல்லாமல் நிறைவடைந்ததனையடுத்து பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது

போட்டி நேற்று இரவு பெங்களூருவில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பினை தெரிவு செய்திருந்தது.  எனினும் மழை குறுக்கிட்டதனால் ஐந்து ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 63 என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கிய நிலையில் மூன்று ஓவர்கள் முடிவில் 40 ஓட்டங்களை எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதனால் போட்டி நிறுத்தப்பட்டு இரு அணிகளுக்குத் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் நடப்பாண்டு ஐபில் தொடரிலிருந்து விராட் கோலி தமையிலான பெங்களுரு அணி வெளியேறுவது உறுதியாகியுள்ளது

#ipl  #bangalore #Rajasthan #viratkohli

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More