Home இலங்கை காங்கேசன்துறை கடற்பரப்பில் 77 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

காங்கேசன்துறை கடற்பரப்பில் 77 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகில் 77 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்த கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவரையும் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இருவரும் மன்னாரைச் சேர்ந்த ஒருவரும் என கடற்படையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பு ஊடாக படகில் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டது. விசாரணைகளின் பின்னர் சான்றுப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் கையளிக்கப்படுவர் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

#kakkesanthurai #ganja #arrest #காங்கேசன்துறை  #கஞ்சா #கைது #கடற்படையினர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More