Home பிரதான செய்திகள் சரியாக திட்டமிட்டு விளையாடியதனால் இங்கிலாந்தை வென்றுவிட்டோம்

சரியாக திட்டமிட்டு விளையாடியதனால் இங்கிலாந்தை வென்றுவிட்டோம்

by admin


சரியாக திட்டமிட்டு விளையாடியதனால் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் வெற்றிப் பெற்றுவிட்டோம் என இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் போட்டியிட்ட நிலையில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்களினால் இலங்கையிடம் தோல்வியடைந்திருந்தது.

இலங்கை தரப்பில் 4 விக்கெட் எடுத்த மலிங்கா ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் வழங்கிய பேட்டியிலேயே  மலிங்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பலம் மிக்க அணி என நன்றாக தெரியும். இறுதி கட்டத்தில் ஸ்டோக்ஸ் எப்படி விளையாடுவார் என்பதும் தெரியும். ஐபிஎல், போட்டிகளில் அவரை கவனித்துள்ளோம். இருப்பினும் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. சரியாக திட்டமிட்டு பந்தை வீசிஅவருக்கு அதிகமாக ஓட்டங்களை கொடுக்காமல் அழுத்தத்தை ஏற்படுத்தினோம்.

எங்கள் திட்டத்த்pனை சரியாக செய்து ஜெயித்தோம். பந்துகளை பல்வேறு விதமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினோம். இறுதியில் போட்டி எங்களுக்கு சாதமாகிவிட்டது. இப்போது இந்த வெற்றி எங்கள் அணி மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

# திட்டமிட்டு  #இங்கிலாந்தை #லசித் மலிங்கா #உலக கிண்ண

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More