Home இலங்கை ரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்…

ரிஷாத் பதியுதீன் – மகேஷ் சேனாநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றனர்…

by admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் இன்று முன்னிலையாக உள்ளனர்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று பகல் 2 மணி அளவில் தெரிவுக்குழு கூடவுள்ள நிலையில் அதற்கான அறிவித்தல் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.  மேலும் இன்று இடம்பெறவுள்ள சாட்சி விசாரணை வழமைபோன்று ஊடகங்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். #உயிர்த்தஞாயிறுதாக்குதல் #பாராளுமன்ற தெரிவுக்குழு #ரிஷாத்பதியுதீன் #மகேஷ்சேனாநாயக்க #தெரிவுக்குழு

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More