Home இலங்கை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரே களமிறங்குவார்…

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரே களமிறங்குவார்…

by admin

நாட்டில் தற்போதிருக்கும் சிறந்த அரசியல்கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்றும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயமாக, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரே களமிறங்குவாரெனவும், பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதேப்போல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் சேர்வதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து எவரும் எந்த நேரத்திலும் வரலாம். அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டுமெனில், மைத்திரிபால சிறிசேன 5 வருடங்களில் ஓய்வுப் பெற்றுச் செல்லும் எண்ணத்திலேயே ஜனாதிபதியானார் என்பதை மஹிந்த அமரவீர கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தானும் எதிர்பார்ப்பது அவர் ஓய்வுப்பெற்றுச் செல்லும் வரையே எனத் தெரிவித்துள்ள ரொசான் ரணசிங்க பொலன்னறுவையில் சிறிசேன ஆட்சியை நிறைவு செய்து, ரணசிங்க ஆட்சியை ஏற்படுத்துவதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். #ஸ்ரீலங்காபொதுஜனபெரமுன #ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி #மஹிந்தஅமரவீர

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More