Home இலங்கை ‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…

‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…

by admin

‘பற்றிக்கலோ கம்பஸ்’ என்ற  தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழு முன்னிலையில் தெரிவித்துள்ளது.

‘பற்றிக்கலோ கம்பஸ்’ என்ற தனியார் நிறுவனம் தொடர்பில் இன்று கோப் குழுவில் விசாரணை நடைபெற்றது. இதன்போது ‘பற்றிக்கலோ கம்பஸ்’ மற்றும் ஹீரா மன்ற ஸ்தாபகர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரின் புதல்வர் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் பிரசன்னமாகியிருக்கவில்லை. வெளிநாட்டு தூதுக்குழுவொன்றை சந்திப்பதற்காக வெளிநாடு செல்வதாக அவர்கள் கோப் குழுவுக்கு அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் உயர்கல்வி அமைச்சு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு அதிகாரிகள் இதில் பங்கேற்றார்கள் கோப் குழு கூட்டம் அதன் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு  இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More