Home இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தின் பேரில் கைதானோருக்கு மீண்டும் விளக்கமறியல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தின் பேரில் கைதானோருக்கு மீண்டும் விளக்கமறியல்…

by admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அண்மையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் புதன்கிழமை(30) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது ஆஜர்படுத்தப்பட்டவர்கள் 7 பேராகவும் 6 பேராகவும் இரு வேறு சந்தர்ப்பங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி பல மாதங்களிற்கு மேலான விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதனடிப்படையில் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு சந்தேக நபர் புதிதாக பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு கோரி சட்டத்தரணி ஊடாக விடுத்த வேண்டுகோளை செவிமடுத்த நீதிவான் குழந்தையை சிறைக்கு சென்று காண்பிக்கமுடியும் எனவும் இதன்போது சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை தொற்று நோய் பரவும் அபாயம் குறித்து பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும் என விண்ணப்ப மனுவை நிராகரித்தார்.

மேலும் பொலிஸாரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை அடுத்த வழக்கு தவணையை எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி கல்முனை சாய்ந்தமருது சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதில் கல்முனை சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களிற்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேக நபர்களும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More