Home இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

by admin

எதிர் வரும் 16 ஆம் திகதி நடை பெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை (31) நாடளபவியரீதியில் ஆரம்பமாகியுள்ளது

நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (31) காலை 8.30 மணிக்கு தபால் மூல மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில் மன்னார் மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு ஆரம்கமாகியுள்ளது

அதனடிப்படையில் மாவட்ட செயலக ஊழியர்கள் , தேர்தல் திணைக்களத்தின் ஊழியர்கள் , காவல்துறையினர்; தவிர்ந்த ஏனைய அரசு அலுவலர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழன் மற்றும் நாளை வெள்ளி ஆகிய தினங்களில் இடம் பெறுகின்றது.

இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்தில் பிரதேசச் செயலகங்கள்,வலய கல்வி திணைக்களங்களில் இடம் பெற்று வருகின்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.  #ஜனாதிபதிதேர்தல் #வாக்களிப்பு  #ஆரம்பம்

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More