Home உலகம் பாகிஸ்தானில் புகையிரதத்தில் தீவிபத்து – 65 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் புகையிரதத்தில் தீவிபத்து – 65 பேர் உயிரிழப்பு

by admin


பாகிஸ்தானில், விரைவுபுகையிரதத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். கராச்சி – ராவல்பிண்டிக்கு இடையே இயக்கப்படும் தேஜ்காம் விரைவுபுகையிரதம் வழக்கம் போல நேற்றையதினம் ; கராச்சியில் இருந்து கிளம்பிய நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லியாகத்பூர் அருகே இன்று (31) அதிகாலை வந்தபோது, ஒரு பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ ஏனைய பெட்டிகளுக்கும் பரவியதனால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது

இந்த விபத்தில் மூன்று பெட்டிகள் முற்றிலும் எரிந்துள்ள நிலையில் 65 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள், லியாகத்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் காலை உணவு சமைப்பதற்காகப் பயன்படுத்திய சிறியவகை எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது #பாகிஸ்தான் #புகையிரதம் #தீவிபத்து #உயிரிழப்பு

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More