Home இலங்கை யாழ் பல்கலையில் ஏற்பட்ட பதட்டம் தணிந்தது….

யாழ் பல்கலையில் ஏற்பட்ட பதட்டம் தணிந்தது….

by admin

சிறப்பு அதிரடிப் படையினர், காவற்துறையினர்  மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற இருவர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்தத சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவற்துறையினர்   சில நிமிடங்களில்அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினரும் காவற்துறையினரும் மாணவர்களை அச்சுறுத்திய செயற்பாடு நடந்த போதும் பல்கலைக்கழக நிர்வாகம் வேடிக்கை பார்த்ததுடன், அவர்களை உள்ளேவிட்டு பிரதான வாயிலையும் மூட மறுத்தனர் எனத் தெரிவித்து மாணவர்கள் குழப்பமடைந்தனர். இதனால் பல்கலைக்கழக வாயிலில் பதற்ற நிலை காணப்பட்டது. இந்த சம்பவம் இன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிறப்பு அதிரடிப்படையினர் 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களிலும் காவற்துறையினர்  இருவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் சென்ற  இளைஞர்கள் இருவரை சிறப்பு அதிரடிப்படையினரும் காவற்துறையினர்  ர் துரத்தி வந்தனர்.

இளைஞர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் ஆயுதங்களுடன் அவர்களை வளாகத்துக்குள் துரத்திச் சென்றனர்.

எனினும் துரத்தி வந்த இளைஞர்களைக் கண்டறியவதில் சிக்கல் ஏற்பட சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு கலை நிகழ்வுகளுக்காக நின்றிருந்த மாணவர்களை மிரட்டியுள்ளனர்.

இதனால் அத்துமீறி பல்கலைக்கழகத்துக்குள் ஆயுதங்களுடன் சிறப்பு அதிரடிப்படையினர் நுழைந்தனர் எனவும் அவர்கள் வெளியேறாத வகையில் பிரதான வாயிலை மூடுமாறும் மாணவர்கள் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். எனினும் பிரதான வாயில் மூடப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரும் காவற்துறையினரும் அங்கிருந்து வெளியேறினர்.

இதனால் தம்மை அச்சுறுத்திய சிறப்பு அதிரடிப் படையினரை வெளியேற அனுமதித்ததாகவும் அத்துமீறி நுழைந்த சிறப்பு அதிரடிப் படையினர் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெருமளவு மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் கூடினார்கள். இதனால் அவ்விடத்தில் சில மணிநேரம் பதட்டமான சூழல் காணப்பட்டது இதேவேளை, பல்கலையில் இன்றைய தினம் பட்டமளிப்பு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More