Home இலங்கை ஷானி அபேசேகர சேவையிலிருந்து இடைநிறுத்தம் :

ஷானி அபேசேகர சேவையிலிருந்து இடைநிறுத்தம் :

by admin

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்ச ஷானி அபேசேகர சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணைக்குழு இன்று (07) அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக தெரியவந்த தகவலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பதில் காவல்துறைமா அதிபர் சீ.டீ.விக்கிரமரத்னவிடம் டம், காவல்துறைஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஷானி அபேசேகர தொலைபேசி உரையாடல் மூலம் இலங்கை காவல்துறை சேவையை அபகீர்த்திக்கு உள்ளாக்கியமைத் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.  #ஷானிஅபேசேகர  #இடைநிறுத்தம் #குற்றப்புலனாய்வுதிணைக்களம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More