Home இலங்கை போர்த்துகலுக்கு செல்ல முயற்சித்த யாழ் இளைஞன் கைது…

போர்த்துகலுக்கு செல்ல முயற்சித்த யாழ் இளைஞன் கைது…

by admin


குறைவான ஆவணங்களை சமர்பித்து இத்தாலி வழியாக போர்த்துகலுக்கு செல்ல முயற்சித்த 35 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று  (14) அதிகாலை 3.10 அளவில் போர்த்துகல் வழியாக கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ ஆர் -663 விமானத்தில் போர்த்துகல்லுக்கு செல்லும் நோக்கில் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் முதலில் இத்தாலியின் மல்பென்சா நகருக்கு விமானம் ஒன்று புறப்படுவதை அவதானித்து விமான நிலையத்தின் குடிவரவுத் துறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வழங்கிய போர்த்துக்கல் விசா சர்வதேச தரத்திற்கு உட்பட்டதாக இருக்கவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதன் பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியல்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More