Home இலங்கை பிரபல அரசியல்வாதியை கொல்ல முயன்றதால், முன்னாள் புலிகள் கைதாம்….

பிரபல அரசியல்வாதியை கொல்ல முயன்றதால், முன்னாள் புலிகள் கைதாம்….

by admin

கடந்த வியாழக்கிழமை முதல் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள பிரபல அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்கிறக் குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் அறுவர் கைது செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து, வடக்கு, கிழக்கில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் இணைந்து வடக்கில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, வீடொன்றிலிருந்து நவீன தொடர்பாடற் கருவிகளும், சக்தி வாய்ந்த வெடிப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளதாக  பாதுகாப்பு தரப்பு

ஜேர்மன் நாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்த முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அதனைத்  தொடர்ந்தே, குறித்த வீட்டிலிருந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த  சந்தேநபர்களுக்கு இந்திய, மலேசிய நாடுகளில் வசித்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்கள் நிதி உதவி வழங்கிவருவதாகவும், சக்தி வாய்ந்த வெடிப்பொருள்கள் தொடர்பில் விசேடப் பயிற்சியை  சந்தேகநபர்கள் பெற்றிருப்பதாகவும்  பாதுகாப்பு தரப்பு கூறுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More