Home உலகம் உக்ரைனில் 10 பேரைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த ஆயுததாரி கைது…

உக்ரைனில் 10 பேரைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த ஆயுததாரி கைது…

by admin

உக்ரைனில் பேருந்து  ஒன்றை வழிமறித்து 10 பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்த ஆயுததாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுததாரியின் கோரிக்கைகளை நிவர்த்திப்பதாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky காணொளியொன்றை வௌியிட்டதை தொடர்ந்து பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆயுததாரி வெடிபொருட்களையும் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்த ஆயுததாரி ஜனாதிபதியின் காணொளியை தொடர்ந்து முதற்கட்டமாக மூவரை விடுவித்துள்ளார். எனினும் பணயக் கைதிகள் அனைவரும் பின்னர் காவற்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த ஆயுததாரி – மாநில பாதுகாப்பு சேவை பிரிவில் கடமையாற்றிய 44 வயதான Maksym Kryvosh என்பவர் தெரியவந்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More