Home இலங்கை உள்ளூராட்சி வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடுக்க சமிஞ்சை பலகைகள்

உள்ளூராட்சி வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடுக்க சமிஞ்சை பலகைகள்

by admin

உள்ளூராட்சி சபைகளுக்கு உள்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பாவனையைக் கட்டுப்படுத்த சமிஞ்சை பலகைகளைப் பொருத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் யோசனை முன்வைத்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கு உள்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் வீதிகள் சேதமடைகின்றன என்று சபைகளின் தலைவர்கள் சுட்டிகாட்டியதையடுத்து அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய கலந்துரையாடலிலேயே மாகாண ஆளுநர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

உள்ளூராட்சி சபைகளுக்கு உள்பட்ட வீதிகளில் கனரகப் பாவனையைத் தடுக்க அவற்றின் பயணத்துக்கு தடை என்று சமிஞ்சை பலகைகளை நடவேண்டும்.அதற்கு முன்னதாக வீதிகளின் தரத்துக்கு ஏற்ப பயணிக்க முடியாத வாகனங்களின் வகைகளைக் கண்டறியப்படவேண்டும். சமிஞ்சை பலகைகளை நடுவதன் மூலே கனரக வாகனங்கள் உள்ளூராட்சி சபை வீதிகளில் பயணிப்பதை போக்குவரத்து க் காவல்துறையினரால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்- என்றார். #உள்ளூராட்சி #கனரகவாகனங்கள் #சமிஞ்சைபலகைகள் #ஆளுநர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More