Home இலங்கை வீதி ஓரத்தில், தங்கராசா சடலமாக மீட்கப்பட்டார் !

வீதி ஓரத்தில், தங்கராசா சடலமாக மீட்கப்பட்டார் !

by admin



மட்டக்களப்பு வாழைச்சேனை காவற்துறைப் பிரிவிலுள்ள கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (20.01.21) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவற்துறையினர் தெரிவித்தனர்.

கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டை விடடு வெளியேறிய நிலையில் வீட்டின் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் வீதியோருத்தில் உள்ள வெள்ள நீரில் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று புதன்கிழமை (20.01.21) மீட்கப்பட்டதாக காவற்துறையினரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து அந்தப் பகுதிக்கு தடவியல் பிரிவு அழைக்கப்பட்டு காவற்துறையினர் மேலதிக விசாரணைகழள மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More