Home இலங்கை கட்டுநாயக்க – மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க – மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

by admin

கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க மற்றும் மத்தலை விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக 10 மாதங்களுக்கு பின்னா் இன்று (21) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட சுகாதார வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாப்பயணிகளின் ஊடாக நாட்டிற்குள் கொரோனா தொற்றுப் பரவுவதை தடுப்பதற்காக பாதுகாப்பு முறைமைகள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவலின் முதலாவது அலை காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 17 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றாலப்பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #கட்டுநாயக்க #மத்தலை #விமானநிலையங்கள் #சுற்றுலாப்பயணிகள் #கொரோனா

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More