Home இலங்கை இரா.சாணக்கியன் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை

இரா.சாணக்கியன் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை

by admin

நாடாளுமன்ற உறுப்பினர்களான  இரா.சாணக்கியன்  கோ.கருணாகரம் இத.கலையரசன்  உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி முன்னிலையாகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி கல்முனை காவல் நிலையத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடைஉத்தரவு பெறப்பட்டிருந்தது.


எனினும் பேரணி இடம்பெற்றதுடன்  நீதிமன்ற தடைஉத்தரவினை மீறி  நீதிமன்ற தடைஉத்தரவு பெறப்பட்டவர்கள் என பெயரிடப்பட்டவர்கள் சிலர் மீறி கலந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட  எழுவருக்கு  எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று கல்முனை காவல்துறையினரினால்  கடந்த 5.02.2021 அன்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கு மீதான விசாரணை   கல்முனை நீதவான் ஐ.ஏன் றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான  இரா.சாணக்கியன் கோ.கருணாகரம் த.கலையரசன் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் சீ.யோகேஸ்வரன் மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேசானந்தன்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோரை  எதிர்வரும் ஏப்ரல் மாதம்  30 ஆந் திகதி   மன்றில் முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்தார். #பொத்துவில் #பொலிகண்டி #பேரணி #தடை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More