Home இலங்கை காணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு:

காணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு:

by admin

2021.03.20

காணாமல் போனோரின் உறவினர்கள் சார்பில் குழு ஒன்றினை அமைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒரு மாதத்தினுள் குறித்த விவகாரத்திற்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

காணாமல் போனோரின் உறவினர்களுடன் இன்று(20.03.2021) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த உறுதிமொழியினை வழங்கியுள்ளார்.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களினால் காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருவதுடன், பல்வேறு வாழ்வாதார பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் குறித்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் போனோரின் உறவினர்கள், தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியப்படுத்த வேண்டும் எனவும் உறவுகளை இழந்தமையினால் எதிர்கொண்டு வருகின்ற வாழ்வாதார பாதிப்புக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

காணாமல் போனோரின் உறவினர்களின் வலிகளை அனுபவ ரீதியாக புரிந்து கொள்வதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரத்தினைத்தினை வழங்கி குறித்த விவகாரத்தினை தீர்த்து வைக்க விரும்புவதாகவும் எந்தவிதமான அரசியல் நோக்கங்களும் தனக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு மாத காலத்தினுள் குறித்த விவகாரத்தினை தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

ஊடகப்பிரிவு – கடற்றொழில் அமைச்சு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More