Home இலங்கை இன – மத சிறுபான்மையினரைப் பாதுகாக்க, இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு !

இன – மத சிறுபான்மையினரைப் பாதுகாக்க, இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு !

by admin

மனித உரிமைகளை மதிப்பளித்தல், எதிர்காலத்திற்கான அமைதி , நல்லிணக்கத்திற்கு உறுதியளிப்பதைப் பொறுத்தே இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் செழிப்பும்  அமையும் என  அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இதனடிப்படையில், இன மற்றும் மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க , அமெரிக்கா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியதாகவும்,   இந்த தீர்மானத்திற்கு  அமெரிக்கா இணை அனுசரனை  வழங்கியதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன –  மத சிறுபான்மையினர், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அதன் கடந்த காலத்தை நிவர்த்தி செய்ய நம்பகமான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும்  சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுமாறு  இலங்கைக்கு அழைப்பு விடுப்பதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்தத்  தீர்மானம்,  மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கான அறிக்கையிடல் தேவைகளை விரிவுபடுத்துவதாகவும்,  எதிர்கால பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்கான ஆதாரங்களை சேகரித்து அவற்றை பாதுகாப்பதற்கான ஆணையை உள்ளடக்கியதாகவும் இருப்பதோடு  கடந்த கால  செயற்பாடுகள்  குறித்த கவலையை வெளிப்படுத்துவதாகவும் ஜலினா போர்ட்டர் வலியுறுத்தி உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More