Home இலங்கை சங்கிலியின் வீதியில் வீடொன்றினுள் புதையல் தேடி அகழ்வு:

சங்கிலியின் வீதியில் வீடொன்றினுள் புதையல் தேடி அகழ்வு:

by admin

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புதையல் தேடி அகழ்வுகள் இடம்பெற்றனவா எனும் கோணத்தில்காவல்துறையினா்தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


நல்லூர் – சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றினுள்  இராணுவத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் நேற்று நண்பகல் அகழ்வு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர் என காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 
நீதிமன்ற அனுமதி பெறப்படாத நிலையில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியாது. அதனால் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 


காவல்துறையினரின் வருகையை கண்டதும் , அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர். 
அதனை அடுத்து வீட்டின் உரிமையாளரை காவல்துறையினா் விசாரணைக்கு உட்படுத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளார். 


அதனை அடுத்து வீட்டினை காவல்துறையினா் பார்வையிடட போது , வீட்டினுள் சாமி அறை பகுதியிலேயே அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளன. அதனால் புதையல் தேடி அகழ்வுகள் இடம்பெற்று இருக்கலாம் என காவல்துறையினா்ர் சந்தேகிக்கின்றனர். #புதையல்_தேடி #சங்கிலியின்_வீதி #யாழ்ப்பாணம் #நல்லூர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More