Home சினிமா உண்மைக் கதையைத் தழுவி உருவான ‘ராக்கெட்ரி நம்பி விளைவு ’

உண்மைக் கதையைத் தழுவி உருவான ‘ராக்கெட்ரி நம்பி விளைவு ’

by admin

நடிகர் மாதவன் இயக்கி, நடித்துவரும் ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தின்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அலைபாயுதே படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான மாதவன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளாா்.

அவரின் கனவுத் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படம். விக்ரம் வேதா, இறுதிச் சுற்று என தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து அடுத்தடுத்துப் படங்களை நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான மாறா படத்தைத் தொடர்ந்து மாதவனுக்கு இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

1994இல் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாகக் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அதன் பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். குற்றமற்றவரை தேசத் துரோகியாக்கிய அவரது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக்கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் படம் வெளியாக உள்ளதனால், குறித்த ஆறு மொழிகளிலுமே படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. இதில், ஆங்கிலத்தில் வெளியான டிரெய்லாின் வடிவம் புதிதாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் சூர்யாவும், இந்தி, கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஷாரூக்கானும் சிறப்புத் தோற்றத்தில் பத்திரிகையாளர்களாக நடித்திருக்கிறார்கள்.

நம்பி நாராயணன் வேடத்தில் மாதவனும், அவரின் மனைவியாக சிம்ரன் நடித்திருக்கிறார்கள். திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ், ஜார்ஜியா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தியிருக்கிறார்கள். தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரியளவில் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. #உண்மைக்கதை #டிரெய்லர் #ராக்கெட்ரிநம்பிவிளைவு #மாதவன் #சிம்ரன் #நம்பிநாராயணன் #சூர்யா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More