பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த அலிவத்த அசித எனும் நபர் மட்டக்குளிய காவல்துறையினரினால் நேற்றையதினம்) கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளைப் பகுதியில் அவர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் வைத்து அவரைக் கைது செய்த போது கைக்குண்டு ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் குறித்த நபர், கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.