Home இலங்கைஇந்தியா கொரோனா நெருக்கடியிலிருந்து மீள வேண்டி நாக விகாரையில் விசேட பூஜை

இந்தியா கொரோனா நெருக்கடியிலிருந்து மீள வேண்டி நாக விகாரையில் விசேட பூஜை

by admin

சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்திய தேசம் கொடூர கொரோனா தொற்று நோயிலிருந்து  மீண்டு புத்துணர்ச்சி பெற வேண்டி யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையில் இன்றையதினம் ரத்ன சூத்திர பாராயணமும் ஐம்பெரும் கடவுளுக்கு பூஜையும் இடம்பெற்றது. 

இந்தியா கொரோனா நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்காக இலங்கை அரசினதும் நாட்டு மக்களின் சார்பாக இன்றைய தினம் தினம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி தலைமையில் ரத்ன சூத்திர பாராயணமும் இந்து மத குருக்கள் தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றது. 

இலங்கையில் தற்போது உள்ள சட்ட திட்டத்திற்கு அமைவாக சுகாதார நடைமுறைகளை 20 பேர் மட்டும் குறித்த வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள் குறித்த நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் சீமான் எஸ் பாலச்சந்திரன் இந்திய துணைத் தூதரக  அதிகாரிகள், இந்து பௌத்த மத குருமார் கலந்து கொண்டுள்ளனர்  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More