Home இந்தியா மேலும் 3 திரையுலகப் பிரபலங்கள் கொரோனாவுக்கு பலி

மேலும் 3 திரையுலகப் பிரபலங்கள் கொரோனாவுக்கு பலி

by admin

ஆட்டோகிராப் பட புகழ் பிரபல பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

ஆட்டோகிராஃப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே! என்ற பாடல் மூலமாக மக்களுக்கு அறிமுகமான பாடகர் கோமகன் இந்த பாட்டில் மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்.. என்ற வரிகளைப் பாடியிருப்பார்.

பல்வேறு கச்சேரிகளில் பாடிவந்த இவருக்கு இயக்குனர் சேரன் தன்னுடைய படத்தில் வாய்ப்பு வழங்கினார்.

நாகர்கோவிலை பூர்விகமாகக் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளியான இவர் சென்னை மாதவரத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் பணிபுரிந்து வந்ததுடன் இசைக்கச்சேரிகளையும் நடத்தி வந்தார்.

இவருக்கு அண்மையில் மிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்திருந்தது.

இந்நிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐசிஎப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று நள்ளிரவு 1 மணியளவில் காலமானார்.

நடிகர் பாண்டு உயிாிழப்பு

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு (74) சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை காலை காலமானார்.

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்புக்குள்ளாகி சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

கடந்த 1975 ஆம் ஆண்டு மாணவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமான பாண்டு, சிவாஜி, கமல், ரஜினி அஜித், விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

கப்பிடல் லெட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த நடிகர் பாண்டுவுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

பல திரையுலக பிரபலங்களின் இல்லம், நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து கொடுத்த பாண்டு, அதிமுக கட்சிக் கொடியை வடிவமைத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர் – பாடகர் நடராஜன் காலமானார்

பிரபல நடிகருமான பாடகர் நடராஜன் காலமானார். 1933 ஆம் ஆண்டு பிறந்தவர் டி.கே.எஸ். நடராஜன். சிறுவயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி பின்னா் எண்ணற்ற தெம்மாங்குப் பாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

பிரபல நாடகக் குழுவான டி.கே.எஸ். கலைக்குழுவில் நடித்ததால் இவரது பெயருக்கு முன்னால் டி.கே.எஸ். என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.

பாடல் தவிர்த்து ஏராளமான திரைப்படங்களிலும் நடராஜன் நடித்துள்ளார். ´ரத்தபாசம்´, ´நாடோடி´, ´நீதிக்குத் தலைவணங்கு´, ´பொன்னகரம்´, ´தேன் கிண்ணம்´, ´கண்காட்சி´, ´காதல் பரிசு´ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடராஜன் நடித்துள்ளார்.

´வாங்க மாப்பிள்ளை வாங்க´ படத்தில் சங்கர் கணேஷ் இசையில் வெளியான ´என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி´ என்ற பாடல் இவரைப் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More