Home இலங்கைதமிழக மீனவர்களின் ஆடையில் புலிகளின் தலைவரின் படம் – விசாரணைகளை ஆரம்பித்துள்ள கடற்படை

தமிழக மீனவர்களின் ஆடையில் புலிகளின் தலைவரின் படம் – விசாரணைகளை ஆரம்பித்துள்ள கடற்படை

by admin

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக ஊடுருவி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் சிலர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் படம் பொறிக்கப்பட்ட ‘ரி.சேர்ட்’ அணிந்திருந்தமை தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை கடற்பரப்பினுள் கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்தனர். 


அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த ‘ரி.சேர்ட்ல’ புலிகளின் தலைவரின் பெயரும் , படமும் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை அவதானித்த கடற்படையினர் அவர்களை ஒளிப்படம் , காணொளிகள் எடுத்த பின்னர் அவர்களை விடுவித்தனர்.
தற்போது குறித்த காணொளிகள் மற்றும் ஒளிப்படங்களை அடிப்படையாக கொண்டு கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More