Home இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நடத்த தடை

முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நடத்த தடை

by admin

முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கோ மக்கள் கூடுவதற்கோ முல்லைத்தீவு காவல்துறையினா் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனா்.

கொரோனா நிலையை கருத்தில் கொண்டு, 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை, முள்ளிவாய்க்கால் பகுதியில், எந்த நிகழ்வும் நடத்தகூடாது எனவும் மக்கள் ஒன்றுகூடக் கூடாது எனவும், பொது இடத்தில் வைத்து நினைவுகூர கூடாது எனவும் கோரி முல்லைத்தீவு காவல்துறையினா் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் இவ்வாறு நீதிமன்றம் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது

து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இந்த நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஏ.ஆர் 418/21 வழக்கு இலக்கத்தின் கீழ், முல்லைத்தீவ மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவைப் பெற்று, உரியவர்களிடம் வழங்கவுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More