Home இலங்கை சுகாதார நடைமுறைகளை மீறி ஒன்று கூடிய மதுப்பிரியர்கள்:

சுகாதார நடைமுறைகளை மீறி ஒன்று கூடிய மதுப்பிரியர்கள்:

by admin


மன்னார் பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (13) மாலை சுகாதார நடை முறைகளை கடைபிடிக்காது பலர் மது பானப் பொருட்களை கொள்வனவு செய்ய முண்டியடித்தபோதும் குறித்த பகுதியில் காவல்துறையினா் கடமையில் ஈடுபடவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இன்று வியாழக்கிழமை இரவு முதல் எதிர் வரும் மூன்று தினங்கள் நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 அத்துடன் மதுபானசாலைகளை மாலை 6 மணியுடன் மூடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.


இந்நிலையில், மூன்று தினங்கள் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதால் இன்று வியாழக்கிழமை  மாலை மன்னாரில் உள்ள மது பானசாலைகளுக்கு முன் அதிகளவிலான மதுப் பிரியர்கள் கூடியிருந்தனர்.


மது விற்பனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள வீதி முழுவதும் மோட்டார் சைக்கில் உற்பட தமது வாகனங்களை நிறுத்தி விட்டு சுகாதார நடை முறைகளை கருத்தில் கொள்ளாது மது பிரியர்கள் மது பான பொருட்களை கொள்வனவு செய்ய முந்தியடித்தனர்.


  மதுபானசாலைகளுக்கு முன் பிரதான வீதியில் நீண்ட வரிசை காணப்பட்டதுடன், மாலை 6 மணிக்கு மது பானசாலைகளை மூட முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.
மது பிரியர்கள் எதிர் வரும் 3 தினங்களுக்கு தேவையான மதுபான பொருட்களை கொள்வனவு செய்து சென்றுள்ளனர்.
 

சுகாதார நடை முறைகளை  மீறி அதிகளவிலான கூட்டம் காணப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினா் குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும்,மாலை 6 மணிக்கு பின்பே   குறித்த பகுதிக்கு வந்ததாகவும் தெரிய வருகின்றது.


இதனால் குறித்த பகுதியில் நீண்ட நேரம் சுகாதார நடை முறைகள் பின் பற்றப்படவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More