Home இலங்கைபயணத்தடை அமுலில் உள்ள போது நாவற்குழியில் 5 வீடுகள், ஆலயத்தில் திருட்டு

பயணத்தடை அமுலில் உள்ள போது நாவற்குழியில் 5 வீடுகள், ஆலயத்தில் திருட்டு

by admin

நாடாளாவிய ரீதியில் பயண தடை அமுலில் இருக்கும் வேளையில் ஐந்து வீடுகள் மற்றும் கோவில் ஒன்றில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதிகளிளையே குறித்த திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றள்ளன.


நாவற்குழி 5வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள 5வீடுகளுக்குள்ளும் அடுத்தடுத்து புகுந்த திருடர்கள், ஒரு வீட்டில் 1இலட்சத்து 10ஆயிரம் ரூபாய் பணமும், மற்றொரு வீட்டில் 40க்கும் மேற்பட்ட வளர்ப்பு புறாக்கள், மற்றைய வீட்டில் 16வளர்ப்பு கோழிகள், மற்றைய வீட்டில் 6 வளர்ப்பு கோழிகள் , ஐந்தாவது வீட்டில் 5வளர்ப்பு முயல்கள் என்பன திருடப்பட்டுள்ளன.


 இதேவேளை, நாவற்குழி சித்திர வேலாயுதர் ஆலயத்தினுள் ஓடு பிரித்து நுழைந்த திருடர்கள் , ஆலயத்தினுள் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடி சென்றுள்ளனர்.


குறித்த சம்பவங்கள் தொடர்பில் , வீடுகளின் உரிமையாளர்கள், ஆலய நிர்வாகத்தினர் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More