Home இலங்கை இராணுவத்தை கண்டு தப்பியோடிய மணல் கொள்ளையர்கள்

இராணுவத்தை கண்டு தப்பியோடிய மணல் கொள்ளையர்கள்

by admin

மணல் கொள்ளையர்களை இராணுவத்தினர் சுற்றி வளைத்த போது உழவு இயந்திரத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர். 
யாழ்ப்பாணம் தென்மராட்சி கெற்போலி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. 

குறித்த பகுதியில் மணல் கொள்ளையர்கள், உழவு இயந்திரத்தில் வந்து மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். என இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் விரைந்திருந்தனர். 

மணல் கொள்ளையர்களை சுற்றி வளைத்து இராணுவத்தினர் பிடிக்க முற்பட்ட போது கொள்ளையர்கள் உழவு இயந்திரத்தை அவ்விடத்தில் கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். 
சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் கொடிகாம காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , காவல்துறையினர் உழவு இயந்திரத்தை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றதுடன் , விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More