82
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.மாநகர சபையில் அனுஷ்ட்டிக்கபட்டது. யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் பிரதி முதல்வர் து. ஈசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர் கருத்து தெரிவிக்கையில் , உயிரிழந்த எமது உறவுகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவர்களது இழப்புக்கு நீதியை பெற்று கொடுப்பதாகும். நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட நாம் உறுதி பூணுவோம் என தெரிவித்தார்.
Spread the love