Home இலங்கை யாழில். 7251 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர்உணவு பொதிகள்

யாழில். 7251 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர்உணவு பொதிகள்

by admin

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் இதுவரையில் யாழில் 7251 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். 


யாழில்.இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 
தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியதன் அடிப்படையில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட  குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும்,  இடைக்கால நிவாரண உதவியாக அந்த 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதியை  மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றோம்.


அதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இன்று வரை சுமார் 7251 குடும்பங்களுக்கு  அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா  பெறுமதி கொண்ட உணவு பொதி தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.  தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி  வழங்கப்பட்டு வருகின்றது. 


இந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு  இருக்கும்  காலத்தில் எமக்கு உரிய விபரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அவர்களுக்கு  அது கிடைக்கும். அதாவது விபரங்கள் கிடைக்கப்பெறுவதன் அடிப்படையிலேயே, உதவிப் பொருட்களை வழங்க முடியும். 
 இந்த விடயம் தொடர்பில் சகல பிரதேச செயலர்களுக்கும் உரியவரான அறிவுறுத்தல்கள் எம்மால் வழங்கப்பட்டுள்ளன. எனவே தனி தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More