Home இலங்கை போலி காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமறியல்

போலி காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமறியல்

by admin

 

காவல்துறையினா் எனத் தெரிவித்து பயணத் தடை உத்தரவை மீறி வீதிகளில் நடமாடிய இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இன்று உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர் காவல்துறை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று மன்றில் அறிக்கையிடப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகரில் பயணத் தடையை மீறி நடமாடிய ஒருவரை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அவர் தான்காவல்துறை உத்தியோகத்தர் எனத் தெரிவித்ததுடன் காவல்துறை அடையாள அட்டையின் நிழல் பிரதியையும் காண்பித்துள்ளார்.

வீதித் தடை கடமையிலிருந்த காவல்துறையினர் சந்தேகம் கொண்டு அவரை யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போது, ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக அந்த நபர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டது.

அவர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். காவல்துறை சேவையில் உள்ளதாகத் தெரித்து நன்மையைப் பெற முற்பட்டமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு எதிராககாவல்துறையினர் பி அறிக்கை தாக்கல் செய்தனர்.

காவல்துறையினரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று சந்தேக நபரை வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அத்துடன், கோப்பாய் காவல்துறை பிரிவில் இலங்கைக் காவல்துறை ரிசேட் அணிந்தும் பயணித்த மோட்டார் சைக்கிளில் காவல்துறைஎன பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி பயணித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் என தம்மை போலியாக அறிமுகப்படுத்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக சந்தேக நபர் மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று கோப்பாய் காவல்துறையினரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேக நபரை வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More