Home இலங்கை “என் சாவுக்கு காரணம்” என ஹிஷாலினியின் அறைச் சுவரில் எழுத்துகளாம்…

“என் சாவுக்கு காரணம்” என ஹிஷாலினியின் அறைச் சுவரில் எழுத்துகளாம்…

by admin

சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறைப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண இன்று (03.07.21) தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, . ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த அந்த சொற்களின் அர்த்தம் “என் சாவுக்கு காரணம்” என்பதாகும் எனவும், இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதற்காக ஹிஷாலினி பாடசாலை காலத்தில் பயன்படுத்திய அப்பியாச கொப்பிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More