யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்புத் துறையைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவரும், புத்தூரைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் கோண்டாவிலைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் என 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176ஆக உயர்வடைந்துள்ளது