Home இலங்கை யாழில் கணவன் – மனைவி கொரோனோ தொற்றால் உயிரிழப்பு

யாழில் கணவன் – மனைவி கொரோனோ தொற்றால் உயிரிழப்பு

by admin

யாழில் கணவன் மனைவி கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த தம்பதியினரே கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 


சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயதான மனைவி கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மின் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. 


இந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 97வயதுடைய அவரது கணவர் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More