Home இலங்கை இ.போ.ச பேருந்து ஓட்டுனரின் வெறித்தன ஓட்டத்திற்கு கிளிநொச்சி மாணவி பலி!

இ.போ.ச பேருந்து ஓட்டுனரின் வெறித்தன ஓட்டத்திற்கு கிளிநொச்சி மாணவி பலி!

by admin

கிளிநொச்சி மத்திய கல்லூரியை அண்மித்த, பாதசாரிக்குரிய மஞ்சல் கடவையில் கடக்க முற்பட்ட மாணவி வாகனங்கள் மோதியதில் சம்பவ இத்திலேயே மரணமானார்.

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து, கிளிநொச்சி மத்திய கல்லூரியில், உயர்தர வகுப்பிற்கான அனுமதி பெறச் சென்ற மாணவிகள், பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சல் கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார். இன்று (15.11.21) காலை 8.15 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏ9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக மஞ்சல் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது. இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதில் ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலயே திருவாசகம் மதுசாளினி வயது 17 என்ற மாணவி இறந்ததுடன் மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை துவிச்சக்கர வண்டியில் நாளாந்தம் ஊற்றுப்புலத்திலிருந்து கிளிநொச்சி விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளி மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் தனது மகளை உயர்தரத்திற்கு கற்பித்து அனுப்பிய நிலையில் முதல் நாளே இந்த விபத்தும் பேரிழப்பும் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More