நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக் கார்த்திகை உற்சவம் இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்று வள்ளி, தேவசேனா சமேதரராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முருக பெருமான் உள்வீதியுலா வந்தார்.