Home இலங்கை மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு – காவல்துறையின் விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்றம்

மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு – காவல்துறையின் விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்றம்

by admin

மன்னாரில் நாளைய தினம் சனிக்கிழமை (27) ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்று வெள்ளிக்கிழமை(26)    மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நீதவான் நிராகரித்துள்ளார். 

 
தமக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் நாளைய தினம் மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் , மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உப தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கு எதிராக மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்க கோரி இ மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது.


இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் போதிய சாட்சிகள்   மன்றில் சமர்ப்பிக்கப்படாமையினால்  , மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நீதவான் நிராகரித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More