Home இலங்கை முல்லைத்தீவு ஊடகர், ராணுவ தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு ஊடகர், ராணுவ தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

by admin

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன், இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து , இன்று (28.11.21), முல்லைத்தீவு நகரப் பகுதியில், பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தின் பல்வேறு ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ,இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஊடகவியலாளர் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தாக்குதல்கள் சித்திரவதைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் கோரி, குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச, நகரசபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முக்கியஸ்த்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More