Home இலங்கை கோந்தைப்பிட்டியில் காணாமல் போனவர்களில், ஒருவர் சடலமாக மீட்பு

கோந்தைப்பிட்டியில் காணாமல் போனவர்களில், ஒருவர் சடலமாக மீட்பு

by admin
File Photo

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் காணாமல் பொன யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்களில் ஒரு மீனவர், இன்றைய தினம் திங்கட்கிழமை காலை (13.12.21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என தெரிய வந்துள்ளது.

மேலும் அதே இடத்தைச் சேர்ந்த செந்தூரன்(வயது-28) என்கின்ற இரண்டு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பருத்தித்துறையை சேர்ந்த இருவர், கோந்தைப்பிட்டியில் காணாமல் போயினர்!

மன்னார் – கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

யாழ். பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர் நேற்று மதியம் ஒரு படகில் பயணித்துள்ளனர். மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில் படகின் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார்.

கடலில் இறங்கியவரை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. அவரை காப்பாற்ற இறங்கியவரையும் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த படகில் இருந்த ஒருவர் மட்டுமே பள்ளிமுனை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தில் காணாமல் போன பருத்தித்துறையை சேர்ந்த தர்சன் மற்றும் செந்தூரனை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறித்த பள்ளிமுனை கடல் பகுதியில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட ஆற்று நீரோட்டங்கள் இருப்பதாகவும் இதில் ஏதாவது ஒரு நீரோட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் என்று மன்னார் கடற்தொழில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More