Home இலங்கை ஜனாதிபதியை, ‘ஹூ’ சத்தமிட்டு கேலி செய்த மக்கள்!

ஜனாதிபதியை, ‘ஹூ’ சத்தமிட்டு கேலி செய்த மக்கள்!

by admin


பால்மா கொள்வனவு செய்வதற்காக மிரிஹானையில் வரிசையில் நின்றிருந்தவர்கள் ஜனாதிபதி பயணிக்கும் போது ‘ஹூ’ சத்தமிட்டு கிண்டல் செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்தை காவற்துறையினர், பலவந்தமாக பூட்டுப்போட்டு மூடிவிட்டனர் எனவும் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க வில்லை. அச்செய்தி முழுமையாக பொய்யானது என, இலங்கை காவற்துறைத் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது குறித்து காவற்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி, மிரிஹானவில் பால்மா கொள்வனவு செய்வதற்காக இருந்த வரிசை தொடர்பில் தேடியறியுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More