Home இந்தியா பேரறிவாளனுக்கு ஒன்பதாவது முறையாக பரோல்

பேரறிவாளனுக்கு ஒன்பதாவது முறையாக பரோல்

by admin

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகசிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவுகளட ஏற்பட்டுள்ளன. இதனால் அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் அற்புதம்மாள் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவை பாிசீலித்த முதல்வர் து,பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.

கடந்த மே 28-ம் திகதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பரோலில் சென்ற பேரறிவாளன் பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில், அவருக்கு எட்டு முறை பரோல் நீட்டிக்கப்பட்டது.

அவரது பரோல் நாளையுடன் (ஜன.24) முடிவடையும் நிலையில், 9-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More