குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகேவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்வதற்காக நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த அவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.