Home இலங்கை யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

by admin

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தினர்., யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி!, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்!, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேசமே நாம் அழுவது கேட்கவில்லையா? வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேணடும்., தமிழரின் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும்., எங்கே எங்கே உறவுகள் எங்கே? உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More