Home இலங்கை யாழிலிருந்து முல்லை நோக்கி பயணித்த பேருந்து விபத்து – ஒருவா் பலி

யாழிலிருந்து முல்லை நோக்கி பயணித்த பேருந்து விபத்து – ஒருவா் பலி

by admin

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனா். காயமடைந்தவா்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னால் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தினை தனியார் பேருந்து முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து ஏற்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்தில் 23 பேர் பயணித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More