Home இலங்கை மகிந்தவிற்கெதிரான போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளானவா் வைத்தியசாலையில்

மகிந்தவிற்கெதிரான போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளானவா் வைத்தியசாலையில்

by admin

நேற்று முன்தினம்  பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் வருகைக்கு  எதிராக  யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறையினாின் தாக்குதலுக்குள்ளான  முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

காவல்துறையினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது பேருந்தின் வாசல்படியிலிருந்து காவல்துறையினரால் கீழே இழுத்தெறியப்பட்ட   ஈஸ்வரி பலமாக கீழே விழுந்து நிலத்தில் அடிபட்டிருந்த போது அங்கிருந்த காவல்துறையினர் சப்பாத்து கால்களால் அவரது வயிற்றுப்பகுதியில் மிதித்துள்ளதோடு தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையினரின் தாக்குதலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த மரியசுரேஸ் ஈஸ்வரி   போராட்டம் நிறைவுற்று முல்லைத்தீவிலுள்ள தனது வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை சென்ற நிலையில் வாந்தி எடுத்தபின்னர்  மயக்கமுற்று கீழே விழுந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு அவர் தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருகின்றார் .

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More