Home இலங்கை அவுஸ்ரோலியா செல்ல முயன்ற 77 பேர் கைது!

அவுஸ்ரோலியா செல்ல முயன்ற 77 பேர் கைது!

by admin

மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு இயந்திர படகில் சட்விரோதமாக பயணித்த 77 பேரை இன்று (11.07.22) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவிதுள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய இன்று அதிகாலை 2 மணி அளவில் மட்டக்களப்பு ஏறாவூர் காவற்துறை பிரிவிலுள்ள கடல்பகுதியில் பயணித்த இயந்திரப்படகை கடற்படையின் படகுகள் சுற்றிவழைத்தனர்.

இதில் சட்விரோத குடியேற்றக்காரர்கள் 60 பேரை கைது செய்ததுடன் குறித்த சட்டவிரோத படகில் ஏறுவதற்கு களுவங்கேணி கடற்கரையில் வான் ஒன்றில் காத்திருந்த 17 பேர் உட்பட கடற்படை புலனாய்வு பிரிவினர் காவற்துறையினருடன் இணைந்து சுற்றிவழைத்து 77 பேரை கைது செய்துள்ளனர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More